எனக்கு கல்யாணமோ கல்யாணம், கன்னி கழிய கல்யாணம் ,
கல்யாண பேச்சு எழுந்தபோது கனவு கண்டேன்,
கல்யாணமான ஆணுடன்தான் கல்யாணம் எனக்கேட்டதும் , துவண்டு போனேன்,
தூண்டிலில் மாட்டிக்கொண்ட மீனைப்போல தவித்தேன்,
இன்னொருத்தி பெற்றெடுத்த கன்றுகளை காப்பாற்றத்தான் என் கல்யாணம் என்றதும்,
கதறினேன் மனதிற்குள், அதிர்ந்து எழுந்து அலறினேன் ,
அடிக்குமேல் அடி வாங்கி, அடி பணிந்தேன், மனம் ஒடுங்கியும்,
உடல் நடுங்கியும் அடி பணிந்தேன். அடுத்த ஜென்மத்தை நம்பி காத்திருக்க வேண்டாம்,
என முடிவெடுத்து ஆயுளை முடிக்கட்டுமா, இல்லை, அடைக்கலம் ஆகட்டுமா, ஆண்டவனே ?
Leave A Comment