எண் சாண் அளவே, எம்முடைய உடலாம்,
எந்தன் வாழ்வின் , எண்களே கணிதம்,
கணிதமில்லா எதுவும் , உயிரற்ற உடலாம்,
ஒவ்வொரு எண்ணின் மதிப்பே மதியாம்,
கணக்கின் அழகே, கணக்கில்லா எழிலாம்,
எண்ணிக்கை எதிலும் தேவை நோன்பாம்,
ஆற்றில் கொட்டினாலும் அளந்தே கொட்டு,
கணித மேதை ராமானுஜம் நம் ஊர் ஆஸ்தியாம்..
எழுதியவர் சகோதரி பர்வதம் ரகுபதி.
Leave A Comment